Thursday, August 30, 2018

[31-Aug-2018] ‘யு.டி.ஐ., அசெட் மானேஜ்­மென்ட்’ ஐபிஓ

‘யு.டி.ஐ., அசெட் மானேஜ்­மென்ட்’ நிறு­வ­னத்­தின் பங்கு வெளி­யீட்­டிற்கு, தடை­யில்லா சான்று வழங்க, மத்­திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், இந்­நி­று­வ­னத்­தில் உள்ள, 74 சத­வீத பங்கு மூல­த­னத்தை, 40 சத­வீ­த­மாக குறைக்­கு­மா­றும், நான்கு பொதுத் துறை நிறு­வ­னங்­களை, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் கேட்­டுக் கொண்­டுள்­ளது. இதை­ய­டுத்து, ‘எல்.ஐ.சி., பஞ்­சாப் நேஷ­னல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா’ ஆகி­யவை, தலா, 8.5 சத­வீத பங்­கு­களை விற்­பனை செய்­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதன் மூலம், யு.டி.ஐ.ஏ.எம்.சி., புதிய பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்கி, 40 சத­வீத பங்­கு­களை விற்­பனை செய்து, 5,000 கோடி ரூபாய் திரட்­டும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இப்­பங்கு வெளி­யீட்டை நிர்­வ­கிக்­கும் பொறுப்பு, ‘ஐ.சி.ஐ.சி.ஐ., செக்­யூ­ரிட்­டிஸ்’ நிறு­வ­னத்­திற்கு வழங்­கப்­பட்­டு உள்­ளது.