Sunday, February 15, 2015

முதலீடு - தங்கம்

குவான்டம் கோல்டு இ.டி.எஃப். திட்டத்தில் அரை கிராம் தங்கம்கூட வாங்க முடியும். இந்த ஃபண்டின் என்.ஏ.வி. மதிப்பு, மார்ச் 14-ம் தேதி நிலவரப்படி 1010.25 ரூபாய். எனவே, இந்த குவான்டம் கோல்டு இ.டி.எஃப்-ல் நீங்கள் 1,000 ரூபாயில் முதலீட்டை ஆரம்பித்துவிடலாம். இந்த ஃபண்ட் கடந்த ஓராண்டில் 24.65%, மூன்றாண்டில் 15.9% வருமானம் கொடுத்திருக்கிறது. இதில், முதலீடு செய்ய உங்களுக்கு டீமேட் கணக்கு இருப்பது அவசியம்.

SYMBOL: QGOLDHALF

ஆன்லைன் வர்த்தகம் செய்வது எப்படி?

இணையத்தில் வர்த்தகம்( online trading ) செய்ய உங்களுக்கு 'டிமேட்' கணக்கு (DEMAT Account) அவசியம். பின் வரும் தளங்கள் இணைய வர்த்தகத்திற்கு உதவுகின்றன.

நீங்கள் செய்ய வேண்டியது இவர்களில் சிறந்தவர்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அவர்களே உங்களுக்கு 'டிமேட்' கணக்கு மற்றும் ஆன்லைனில் வர்த்தகம் செய்ய கணக்கு ஆரமித்து கொடுப்பார்கள். சில வங்கிகளும்( SBI, ICICI, HDFC, IDBI ) ஆன்லைன் வர்த்தகத்தை தொடங்கி உள்ளன. நீங்கள் அதைகூட தேர்வு செய்யலாம்.

http://www.hsbcinvestdirect.co.in
http://www.angeltrade.com
http://www.standardchartered-wealthmanagers.co.in
http://www.kotaksecurities.com
http://www.networthdirect.com
http://www.geojitbnpparibas.com
http://www.religareonline.com
http://www.idbipaisabuilder.in
http://www.reliancemoney.com
http://www.hdfcsec.com
http://www.motilaloswal.com
http://www.5paisa.com
http://www.indiabulls.com
http://www.sharekhan.com
http://www.icicidirect.com
http://www.sbicapsec.com/

சிறந்த இணைய வர்த்தக தளங்களை எப்படி தேர்வு செய்வது?
1. பங்குகளை இவர்கள் வழியாக வாங்கும் போதோ விற்கும் போதோ நாம் குறிப்பிட்ட கமிஷன் ( commission ) தொகையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இது ஒவ்வொரு ஆன்லைன் வர்த்தக தளத்தை பொறுத்து மாறுபடும். குறைவான கமிஷனாக இருதால் நமக்கு பணம் மிச்சப்படும்.
உதாரணமாக ரூபாய் 100 க்கு பங்குகளை வாங்கினாலோ அல்லது விற்றாலோ 0.30 பைசா நாம் கமிசனாக ( commission ) கொடுக்க வேண்டியது இருக்கும்.

2. இரண்டாவதாக ஆன்லைன் வர்த்தக இணைய தளத்தின்( online trading sites ) தரம், வேகம் நன்றாக இருத்தல் அவசியம்.

3. சில தளங்கள் இலவசமாக வாங்கும்(buy) & விற்கும்(sell) ஆலோசனையை வழங்கும்.. அதுவும் சரியானதாக இருத்தல் அவசியம். அவர்கள் சொல்லுகின்றர்களே என்று வாங்கினால் நஷ்டம் நமக்குதான்.
இது போன்ற அம்சங்களை பார்த்து முடிவெடுத்து..விபரம் தெரிந்தவரிடம் நன்றாக விசாரித்து பின் ஆன்லைன் வர்த்தகத்தை தொடருங்கள்..

கணக்கு ஆரம்பிக்க இவைகள் கட்டாயம் தேவை..
பான்(PAN) கார்டு, வீடு முகவரி உறுதிசெய்யகூடிய சான்று, 3-6 மாத பேங்க் சான்று( bank statement ), புகைப்பட உறுதி சான்று( photo ID )

நாள் வர்த்தகம்(INTRADAY TRADING)

( நாள் வர்த்தக கமிஷன் ரூபாய் 100 க்கு 0.03 பைசா என்க. பொதுவாக நாள் வர்த்தகத்திற்கு( Intraday ) கமிஷன் தொகை குறைவு )
உதாரணமாக காலை பத்து மணிக்கு SBI வங்கி பங்கை ரூபாய் 100 வீதம் 10 பங்குகள் 1000 ரூபாய் என நீங்கள் முதலீடு செய்கின்றீர்கள்..
அதே நாள் மதியம் 3 மணிக்கு ரூபாய் 120 வீதம் 10 பங்குகளை விற்கிறீர் அதாவது அன்றே வாங்கி அன்றே விற்றால் அதற்கு பெயர்தான் நாள் வர்த்தகம்( INTRADAY TRADING ).

ஆக 120x10 = 1200 - 36 ( கமிஷன் தொகை தோரயமாக ) = 1164.
காலையில் 1000 ரூபாய் முதலீடு செய்து மதியம் 164 ரூபாய் லாபம் பார்க்கின்றீர்கள்.

கவனிக்க காலையில் 100 ரூபாய்க்கு வாங்கி மதியம் அந்த பங்கு 85 ரூபாய் சென்றுவிட்டால் நட்டமாகிவிடும். அந்த சமயத்தில் அந்த பங்கினை விற்காமல் நீண்ட அல்லது குறுகிய காலத்திற்கு அப்பங்கின் விலை உயரும் வரை பொறுத்து பின் விற்கலாம். 

நம்பத்தகுந்த பங்குகள்

நம்பத்தகுந்த பங்குகள் நிறைய உள்ளன. அவைகளுள் சில இங்கே,
  • SBI
  • BHEL
  • L&T
  • INFOSYS
  • TCS
  • POWER GRID
  • AXIS BANK
  • RELIANCE INDUSTRIES

மீயுட்சுவல் பண்டுகள்( MUTUAL FUNDS )


மீயுட்சுவல் பண்டுகள் என்பவை பங்கு வர்த்தகத்தில் இருந்து சற்று வேறுபட்டது. 

பணத்தை பல பேரிடம் பெற்று அதை மார்கெட்டில் முதலீடு செய்வார்கள்.அதில் வரும் லாபம் முதலீடு செய்த அனைவருக்கும் சமமாக பிரித்துக்கொடுக்கப்படும். சந்தை உயர்வு தாழ்விற்கு ஏற்ப்ப நீங்கள் கொடுத்த பணம் ஏறவோ இறங்கவோ செய்யும். சுருக்கமாக சொல்லுவதென்றால் நேரடியாக நீங்கள் பங்கு சந்தையில் இறங்காமல் மீயுட்சுவல் பண்ட் நிறுவனத்திடம் உங்கள் பணத்தை ஒப்படைத்து அவர்களை நிறுவனம் செய்யும்படி கூறுகின்றீர்கள் என அர்த்தம். இதனால் உங்களுக்கு ரிஸ்க் குறையும். தற்போது நிறைய வகையான மீயுட்சுவல் பண்டுகள் வந்துவிட்டன.

உதாரணமாக ரூபாய் 5000க்கு SBI ONE India Fund மீயுட்சுவல் பண்டினை வாங்கினால்.அப்போதைய அந்த மீயுட்சுவல் பண்டின் நிகர சொத்து மதிப்பு( NAV ) ரூபாய் 20 எனில் உங்களுக்கு 250( 5000/20 ) அளவு என பண்டுகள் வழங்கப்படும்.

NAV ன் மதிப்பு 20 ரூபாயில் இருந்து உயர உயர உங்கள் பணமும் உயரும். ஒரு ஆண்டுகள் கழித்து NAV மதிப்பு 40 ரூபாய் எனில் 250x40=10000 ரூபாய் உங்களிடம்.

கவனிக்க NAV மதிப்பு 20 ரூபாய்க்கும் கீழ் சென்றுவிட்டால் நீங்கள் போட்ட பணம் குறைந்து கொண்டே செல்லும். NAV மதிப்பு பங்கு சந்தையை பொருத்து உயரலாம் அல்லது குறையலாம்.

ஆக மீயுட்சுவல் பண்ட் நிறுவனம் திறமையானதாக இருக்கும் பட்சத்தில் மற்றும் சந்தை உயர்வாக இருக்கும் பட்சத்தில் உங்கள் முதலீடுக்கு உத்திரவாதம் கண்டிப்பாக உண்டு.

மீயுட்சுவல் பண்டில் இரண்டு வகை உண்டு. அவை Open ended, Closed ended.
Open-end Fund
இந்த வகையில் நீங்கள் போட்ட பணத்தை எப்போது நீங்கள் விரும்புகின்றீர்களோ அப்போது எடுக்கலாம்.
Close-end Fund
இந்த வகையில் அவர்கள் கூறிய காலத்திற்கு( 3 ஆண்டுகள் என்க ) இடையே உங்கள் பணத்தை திரும்ப எடுக்க முடியாது.


லாபம் எப்படி பகிர்தளிக்கப்படுகின்றது.
இதில் இரு வகை உள்ளது
DIVIDEND OPTION
இதில் கிடைக்கும் லாபம் பணம் போட்ட அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும். நீங்கள் எவ்வளவு அளவு பண்ட் வைத்திருக்கின்றீர்களோ அதுக்கேற்றார் போல் பகிர்ந்தளிக்கப்படும்.
உதாரணமாக 250x4(ஒரு பண்டுக்கு 4 ரூபாய் லாபம் என்க. ) = 1000 ரூபாய் லாபமாக கொடுத்துவிடுவார்கள். காசோலையாகவோ அல்லது உங்கள் பேங்க் கணக்கிலோ வரவு வைக்கப்படும்.
நீங்கள் போட்ட 5000 தொடர்ந்து முதலீடு செய்யப்படும்( நீங்களாக பண்ட்டை விற்காதவரை )
GROWTH OPTION
இந்த முறையில் கிடைத்த லாபம் மீண்டும் சந்தையில் முதலீடு செய்யப்படும்.
அதாவது உங்களிடம் உள்ள 250 பண்ட் + 1000 ரூபாய் லாபம் இப்படி மாற்றப்படும்,

1000/40(NAV) = 25 பண்ட்
ஏற்கனவே உள்ள பண்ட் 250 + 25 பண்ட் = 275 பண்ட்ஸ்.
உங்களது லாபம் தற்போது பண்ட்டாக மாற்றப்பட்டு மீண்டும் சந்தையில் முதலீடு செய்யப்படும்.

Open-end/Close-end மற்றும் DIVIDEND OPTION/GROWTH OPTION ஆகியவற்றை நீங்கள் தேர்ந்தெடுத்து சரியான மீயுட்சுவல் பண்ட்ல் முதலீடு செய்யுங்கள்.

ரிஸ்க் இல்லாத முதலீடு

ரிஸ்க் இல்லாத முதலீடு இல்லை என்றாலும், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ரிஸ்க் குறைவானவை என்பதோடு மிதமான வருமானம் தருபவை. இந்த வகை ஃபண்டுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு ஜே.எம். ஜி - செக்யூரிட்டி ரெகுலர் . இந்த ஃபண்டின் மூலம் திரட்டப்படும் நிதி அரசாங்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் குறைவாக இருக்கும். இந்த ஃபண்ட் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 9.40% வருமானத்தையும், ஆரம்பம் முதல் 10.24% வருமானத்தையும் தந்துள்ளது

இளமையிலேயே முதலீடு..

ஓய்வு காலத்திற்கான முதலீட்டை 45 வயதிற்கு பிறகுதான் ஆரம்பிக்க வேண்டும் என்றில்லை. சம்பாதிக்க தொடங்கியவுடனேயே ஆரம்பிக்கலாம்.  25 வயதில் இன்றைக்குச் சம்பாதிக்க ஆரம்பித்திருப்பவர்கள், யூ.டி.ஐ. ரிட்டயர்மென்ட் பெனிஃபிட் பிளான் மற்றும் டெம்பிள்டன் ரிட்டயர்மென்ட் பெனிஃபிட் பிளான்களில் மாதம் 500 ரூபாய் வீதம் முதலீடு செய்தால், 30 ஆண்டு கழித்து (ஆண்டுக்கு 10% வருமானம் கிடைத்தால்) கிடைக்கும் வருமானம் 11. 30 லட்சம் ரூபாய்.

லாபம் தரும் விவசாய பங்குகள்

  • RALLIS( A TATA GROUP COMPANY )
  • COROMANDEL( CHENNAI BASED MURUGAPPA GROUP COMPANY )
  • CHAMBLFERT
  • JISLJALEQS
  • BAYERCROP( A GERMAN BASED COMPANY )